tamilnadu

உத்திர பிரதேசம்: கனமழைக்கு 15 பேர் பலி

உத்திர பிரதேசத்தில் கடந்த  நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.   இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு லக்னோவில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. 
இந்நிலையில் தொடர் மழைக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்தனர்.  23 விலங்குகள் பலியாகின.  133 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.